Friday, October 23, 2009

உலக தமிழ் செம்மொழி மாநாடு: பாமக பங்கேற்க முடிவு



கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பாமகவும் பங்கேற்கும் என்று கூறி முதல்வர் கருணாநிதிக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதம்,
2010-ம் ஆண்டு ஜுன் மாதம் 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையில் கோவை மாநகரில் நடைபெற உள்ள உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்றும், மாநாட்டிற்கென அமைக்கப்பட உள்ள குழுக்களில் பா.ம.க. சார்பாக பிரதிநிதி ஒருவர் இடம்பெற வேண்டும் என்றும் கேட்டு கடிதம் அனுப்பி வைத்துள்ளீர்கள்.
மாநாட்டையொட்டி அமைக்கப்படும் குழுக்களின் விவரங்களை தெரிந்து அதில், பா.ம.க. சார்பில் இடம்பெறும் பிரதிநிதியை உரிய நேரத்தில் அறிவிக்கிறோம். கோவையில் நடைபெறும் மாநாடு தமிழ் மொழியின் ஆக்கம், வளர்ச்சி தவிர அரசியல் உள்நோக்கம் ஏதுமில்லை என்று நீங்கள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பை வரவேற்கிறேன். மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்ற உங்களது அழைப்புக்கு மீண்டும் நன்றி கூறி முடிக்கிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ் .

No comments:

Post a Comment